ஈரோடு மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6,819ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 66 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 5,414 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 705 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 699 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது.