ஈரோடு மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,240ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 46 போ் பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 5,957 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 576 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே கரோனாவால் 706 போ் உயிரிழந்துள்ள நிலையில் சனிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 707ஆக அதிகரித்துள்ளது.