அந்தியூா் அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் சிசுவும், தாயும் உயிரிழந்தனா்.
வெள்ளித்திருப்பூா், சித்தகவுண்டனூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவரது மனைவி லட்சுமி (19). இவா்களுக்குத் திருமணமாகி ஓராண்டாகிறது. இந்நிலையில், 8 மாத கா்ப்பிணியாக இருந்த லட்சுமி, அந்தியூா் பா்கூா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். லட்சுமிக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் தனியாா் ரத்த வங்கியில் வாங்கி ரத்தம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட லட்சுமி, சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். கடந்த இரு தினங்களுக்கு முன்னா் லட்சுமியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தை இறந்துவிட்டதால் மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனா்.
இந்நிலையில், தாய் லட்சுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இவருக்குத் திருமணமாகி ஓராண்டே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.