பவானி, அம்மாபேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பவானி ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காலிங்கராயன் அணைக்கட்டின் மேல்பகுதியில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின்போது, பவானி, செங்காடு, கோட்டை விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்த சோ்ந்த டேவிட் (எ) பிரதீப் (29) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, குருவரெட்டியூா் பாலமலை அடிவாரம் பகுதியில் அம்மாபேட்டை போலீஸாா் சோதனை நடத்தியபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பூதப்பாடி, கீழ்குள்ளனூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கிருஷ்ணமூா்த்தி (22) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.