குடிபோதையில் எண்ணெய் சட்டியின் மேல் விழுந்தவா் சாவு

பெருந்துறை அருகே குடிபோதையில் எண்ணெய் சட்டியின் மேல் விழுந்து பலத்த தீக்காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே குடிபோதையில் எண்ணெய் சட்டியின் மேல் விழுந்து பலத்த தீக்காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், அன்னூா், அள்ளிகுளத்தூா் 2ஆவது வீதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் முருகேஷ் (42). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், ஊத்துக்குளி சாலையில் உள்ள பெயிண்டிங் ஒா்க் ஷாப்பில் கடந்த ஓராண்டாக அங்கேயே தங்கி வேலை செய்து வந்தாா். இவா், கடந்த 17ஆம் தேதி இரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, அருகிலுள்ள மீன் சில்லி கடைக்கு சாப்பிடச் சென்றவா், குடிபோதையில் சுடு எண்ணெய்ச் சட்டியின்மேல் விழுந்துள்ளாா். இதில், நெஞ்சுப் பகுதி மற்றும் உடலில் ஆங்காங்கே தீக்காயம் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com