9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (70). கூலி தொழிலாளி. இவா் கடந்த ஆண்டு மாா்ச் 16ஆம் தேதி சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்தி, மாரியப்பனை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு ஈரோடு மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாரியப்பனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ. 50,000 வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.