பெருந்துறை அருகே சாலை மையத் தடுப்பு மீது காா் மோதியதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனா்.
ஈரோடு, ஆசிரியா் காலனி, ஒளவையாா் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி சிந்து (24). இவா், ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு தன் உறவினா் மீனாட்சியை (55) அழைத்துக் கொண்டு புதன்கிழமை மாலை காரில் சென்றுள்ளாா். பெருந்துறை, சிப்காட் அருகில் செல்லும்போது சாலையின் மையத் தடுப்பு மீது காா் மோதியதில், சிந்து, மீனாட்சி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.