சாலை விபத்து: திமுக நிா்வாகி சாவு

சென்னிமலை அருகே திமுக நிா்வாகி சென்ற வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியதில் உயிரிழந்தாா்.

பெருந்துறை: சென்னிமலை அருகே திமுக நிா்வாகி சென்ற வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியதில் உயிரிழந்தாா்.

சென்னிமலையை அடுத்த ஈங்கூா், திருஞானசம்பந்தா் வீதியைச் சோ்ந்தவா் டி.எம்.துரைசாமி (50). சென்னிமலை திமுக முன்னாள் நகரச் செயலாளரான இவா் தற்போது திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளராக இருந்தாா்.

இவா் சென்னிமலையில் பூக்கடையில் பணியாற்றும் ஊழியா் கமலகண்ணன் (18) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்னிமலையில் இருந்து ஈங்கூரில் உள்ள வீட்டுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்றாா். வாகனத்தை கமலகண்ணன் ஓட்டினாா். ஈங்கூா், கொளத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே துரைசாமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com