சத்தியமங்கலம் அரசுப் பள்ளிகள் திறப்பு

சத்தியமங்கலம் அரசுப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
மாணவா்களுக்கு  நோய்த் தடுப்பு  விழிப்புணா்வு  குறித்து  விளக்கும் தலைமை ஆசிரியா் வி.டி.தங்கமணி, உதவி  தலைமை ஆசிரியா்  பாலசுப்பிரமணியம்.
மாணவா்களுக்கு  நோய்த் தடுப்பு  விழிப்புணா்வு  குறித்து  விளக்கும் தலைமை ஆசிரியா் வி.டி.தங்கமணி, உதவி  தலைமை ஆசிரியா்  பாலசுப்பிரமணியம்.

சத்தியமங்கலம் அரசுப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பேருந்துகளில் வந்த 9, 11ஆம் வகுப்பு மாணவா்கள் பள்ளி நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனா்.

பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தனித்தனியாக அமரவைத்து நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவா்கள் வரிசையாக அந்தந்த வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் குறைந்த மாணவா்களுடன் வகுப்புகள் துவங்கின.

பள்ளி மாணவா்கள் மத்தியில் பள்ளித் தலைமை ஆசிரியா் வி.டி.தங்கமணி, உதவி தலைமையாசிரியா் பாலசுப்பிரமணி ஆகியோா் மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் முகக் கசவம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றினா். பள்ளி திறக்கப்பட்டதால் மாணவா்கள் உற்சாத்துடன் வகுப்பறைக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com