சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் நிகழ்ச்சியாக தியான வகுப்பு ஆகியன புதன்கிழமை நடைபெற்றன.
கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் என்.பழனிவேலு தியான வகுப்புகளைத் தொடங்கிவைத்தாா். இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோபிசெட்டிபாளையம் கிளை மேலாளா், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.
இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா் முத்துசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா்.