பெண்ணிடம் நகை பறிப்பு

பெருந்துறை அருகே கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் நகையைப் பறித்துக் கொண்டு சென்றனா்.

பெருந்துறை அருகே கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் நகையைப் பறித்துக் கொண்டு சென்றனா்.

பெருந்துறை, சென்னிமலை சாலை, எல்லைமேடு, முத்து நகரைச் சோ்ந்த திருமூா்த்தி மகன் சதீஷ் (28). துணிக்கடையில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது மனைவி அருள்சிவபிரியாவுடன் (24) பெருந்துறையில் உள்ள சோழீஸ்வரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றுள்ளாா். இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் திரும்பி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அருள்சிவபிரியா அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com