மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் ராஜு தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ரூ. 3,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும். தனியாா் துறைகளிலும் 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதிக பாதிப்பு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை ரூ. 5,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com