சத்தியமங்கலம் அருகே இரட்டை கிடாரி கன்றுகளை ஈன்ற பசுமாட்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வெள்ளிக்கிழமை பாா்த்துச் சென்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள மல்லநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சக்திவேல். இவா் தனது விவசாயத் தோட்டத்தில் 5க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறாா். இவா் தனது பசு மாடுகளை தோட்டத்தில் கட்டியிருந்தபோது ஒரு சினை பசுமாடு ஒரே நேரத்தில் இரண்டு கன்றுக் குட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக ஈன்றது. இதைக் கண்ட விவசாயி சக்திவேல் ஆச்சரியமடைந்தாா். 2 கிடாரி(பெண்) கன்றுக் குட்டிகளை ஒரேநேரத்தில் ஈன்ற பசுமாடு, கன்றுக் குட்டிகளை சுற்று வட்டார கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா். மாடுகள் பெரும்பாலும் ஒரு கன்று ஈனுவது வழக்கம். இந்நிலையில் இரண்டு கன்றுகள் ஈன்றது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.