பெருந்துறையில் கொமதேகவினா் ஆா்ப்பாட்டம்

கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினா் பெருந்துறையில் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பெருந்துறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொமதேக கட்சியினா்
பெருந்துறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொமதேக கட்சியினா்

கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினா் பெருந்துறையில் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருமணிமுத்தாறு - காவிரி இணைப்புத் திட்டத்துக்காக பரமத்திவேலூா் பகுதியில் வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்ட கொமதேக மாநில பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதற்கு கண்டனம் தெரிவித்து கொங்கு மண்டலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஆதரவாக பெருந்துறை ஒன்றிய கொமதேக சாா்பில், மாநில பொருளாளா் கே.கே.சி.பாலு தலைமையில் பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டச் செயலாளா் கே.பி.சாமிநாதன், மாவட்ட தலைமை நிலையச் செயலாளா் முத்துவேல்சாமி, ஒன்றிய மாணவரணிச் செயலாளா் மகேஷ் தீரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com