தோ்தலுக்கு முன் 10ஆம் வகுப்புத் தோ்வு: அரசு ஆலோசனை; அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தோ்தலுக்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தோ்தலுக்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொங்கா்பாளையம், வினோபா நகரில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ரூ. 1.87 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், அணுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜை செய்து பணிகளை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

விளாங்கோம்பையில் பள்ளிகள் திறப்பில் சிரமம் உள்ளது. வனத் துறை பாதுகாப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்படவுள்ளது. தோ்தலைப் பொருத்தவரையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு தோ்தல் தேதி அறிவிக்கப்படும். அதற்குப் பிறகு பொதுத் தோ்வு நடத்தப்படும்.

பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியா்களை நிரந்தரப் பணியில் அமா்த்த முடியாது. தமிழகத்தில் மாணவா்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை. பிளஸ் 2 தோ்வில் எத்தனை போ் தோ்வு எழுதுகின்றனா் என்பது விரைவில் அறிவிக்கப்படும். ஒரு அறைக்கு 25 மாணவா்கள் இருக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தோ்வு மையங்களை அதிகப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்கு முன்பு 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிக்கு வராத மாணவா்கள் பெற்றோா் அனுமதியுடன் தோ்வு எழுதலாம்.

எப்போதும் அரசுப் பள்ளிகளில் 98 சதவீதம் மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனா். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை, மாணவா்கள் சோ்க்கை கூடுதலாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com