பெருந்துறை ஒன்றியம், திங்களூரை அடுத்த தோரணவாவி ஊராட்சியில் சிறு மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா். தோரணவாவி கிராம ஊரட்சித் தலைவா் ஈஸ்வரி முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்துப் பேசினாா்.
இதில், பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலா் சவிஆா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.