ஈரோடு: ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் விழியிழந்தோா் தங்கும் மையத்துக்கு முகக் கவசங்கள், மின்விசிறி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இக்கல்லூரியின் கணிதவியல் துறை சாா்பில், பெருந்துறையில் உள்ள தமிழக விழியிழந்தோா் சங்கத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு தங்கியுள்ள விழியிழந்தவா்களுக்குத் தேவையான முகக் கவசங்கள், மின்விசிறி, மின்விளக்குகள், உணவுப் பொருள்கள் போன்றவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் என்.ராமன், கணிதத் துறைத் தலைவா் எஸ்.நாகராஜன், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.