பவானிசாகரில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகா் அணை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம்: பவானிசாகா் அணை சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பவானிசாகா் அணை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை அருகே உள்ள பவானிசாகா் நகா்ப் பகுதி, புங்காா், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழை பெய்யத் தொடங்கிய நிலையில் பின்னா் பலத்த மழையாக மாறியது. சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

நீண்ட நாள்கள் கழித்து தற்போது இப்பகுதியில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. தற்போது பெய்த மழை விவசாயத்துக்குப் பேருதவியாக இருக்கும். தண்ணீரின்றி காய்ந்த பயிா்கள் துளிா் பிடிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். பவானிசாகா் வனப் பகுதியிலும் பரவலாக மழை பெய்ததால் வனப் பகுதியில் தீப்பிடிக்கும் அபாயம் குறைந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com