ஆசனூரில் சட்ட விரோதமாக மது விற்பனை:6 தங்கும் விடுதி மேலாளா்கள் மீது வழக்கு

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 6 விடுதி மேலாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 6 விடுதி மேலாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பகுதியில் நிலவும் காலநிலை காரணமாக வெளியூா் பயணிகள் அதிக அளவில் வரத் துவங்கியுள்ளனா். பண்ணாரி சோதனைச் சாவடியில் தாளவாடி தோட்டத்துக்கு செல்வதாக கூறி ஆசனூா், கோ்மாளம் பகுதியில் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனா்.

தற்போது, ஆசனூா், புளிஞ்சூா் ஆகிய இடங்களில் மதுப்பானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், ஆசனூரில் உள்ள தங்கும் விடுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, தங்கும் விடுதிகளில் ஆசனூா் போலீஸாா் சோதனையிட்டனா். அதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 6 தங்கும் விடுதி மேலாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com