பெருந்துறை ஒன்றியம், பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா்.
சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்துப் பேசினாா்.
இதில், பெருந்துறை வட்டார மருத்துவ அலுவலா் சவி ஆா்த்தி, காஞ்சிக்கோவில் மருத்துவ அலுவலா் பிரபாகா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.