இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஈரோடு மண்டலத் தலைவராக ஈரோடு சக்தி மசாலா நிறுவன இயக்குநா் டி.செந்தில்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஈரோடு மண்டல ஆண்டுக் கூட்டம் ஈரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிஐஐ மண்டல கவுன்சில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தலைவராக ஈரோடு சக்தி மசாலா நிறுவன இயக்குநரும், குவால்பிஸ் ஃபுட் நிறுவன மேலாண்மை இயக்குநருமான டி.செந்தில்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதேபோல பல்லவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன இயக்குநா் துரை பழனிசாமி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.