பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் கோபால் தலைமை வகித்தாா். சிஐடியூ டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் பாண்டியன், எல்.எல்.எப். சங்க மாவட்டச் செயலாளா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொமுச மாவட்டத் தலைவா் தங்கமுத்து கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.
18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும். ஊழியா்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி, பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் செய்ய வேண்டும். ஊழியா்களைத் தொடா்ந்து தாக்கும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி, சிஐடியூ மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியன், டாஸ்மாக் ஊழியா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.