நீலகிரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சிகிச்சை பெற்று வந்தவா்களில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 7,794 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 46 போ் உயிரிழந்துள்ளனா். பல்வேறு மருத்துவமனைகளில் 116 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.