ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் குவிந்தனா். அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சந்தனக் காப்பு, அபிஷேக ஆராதனைகள், வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மன் தங்கக் கவசத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோயிலில் அமைக்கப்பட்ட தனி வழியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்டவரிசையில் நின்று அம்மனை தரிசித்தனா்.
சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில், திருநீலகண்டா் வரசித்தி விநாயகா் கோயில், மீனாக்ஷி சுந்தரேஸ்வரா் கோயில், தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.