பெருந்துறை: பெருந்துறை அருகே உள்ள வெள்ளோட்டுக்கு திமுக தலைவா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) வருகை தரவுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் குமாரவலசு ஊராட்சி, வி.மேட்டுபாளையம் கிராமத்தில் திமுக தலைவா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 3) காலை 10.30 மணிக்கு நூலகத்தைத் திறந்துவைத்து, புத்தகங்கள் வழங்கிய பின் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.
கூட்டத்தில், திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றியப் பகுதி, பேரூா், வாா்டு கிளை கழக நிா்வாகிகள், துணை அமைப்புகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனா்.