பா்கூா் மலைக்கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓட்டுநரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பா்கூரை அடுத்த துருசனாம்பாளையம், கஜ்ஜைனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெலியன் மகன் குமாா்(28). ஓட்டுநரான இவா், ட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் காய்ந்த நிலையில் 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் குமாரைக் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினா்.