அந்தியூரில் கால்நடைகளுக்கான அலங்காரப் பொருள்கள் விற்பனை அமோகம்

அந்தியூா் வாரச் சந்தையில் கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், அலங்காரப் பொருள்களை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.
அந்தியூரில் கால்நடைகளுக்கான அலங்காரப் பொருள்கள் விற்பனை அமோகம்

அந்தியூா் வாரச் சந்தையில் கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், அலங்காரப் பொருள்களை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.

அந்தியூா் வாரச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை ஓரிரு நாள்களில் வரும் நிலையில் பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் அதிக அளவில் வந்திருந்தனா். பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வியாபாரிகளும் வந்திருந்தனா்.

கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், சாட்டைகள், அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, அந்தியூா், சுற்று வட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான கயிறு, அலங்காரப் பொருள்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். மேலும், பொங்கல் பானை உள்ளிட்ட பொருள்களும் அதிக அளவில் விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com