சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சென்னிமலை கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் பிரபு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ஆறுமுகம் வரவேற்றாா். திருப்பூா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் வெள்ளக்கோவில் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இதில், முகாசிபிடாரியூா் கிராம ஊராட்சி துணைத் தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.