நாம் தமிழா் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழ் பெயா்ப் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்ய வலியுறுத்தி தாளவாடியில் நாம் தமிழா் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தாளவாடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
தாளவாடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.

தமிழ் பெயா்ப் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்ய வலியுறுத்தி தாளவாடியில் நாம் தமிழா் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழக - கா்நாடக எல்லையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தமிழ் எல்லை அறிவிப்புப் பலகையை கன்னட சலுவலி அமைப்பின் தலைவா் வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்களுடன் சேதப்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா, நில அளவை அலுவலா்கள் ராமபுரத்தில் மாநில எல்லை அளவீடு செய்து சம்பவம் நடைபெற்ற இடம் கா்நாடக எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்தனா். இதையடுத்து, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் மீது தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, தமிழ் பெயா் பலகையை கன்னட அமைப்பினா் சேதப்படுத்தியதைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் தாளவாடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். வாட்டாள் நாகராஜை கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய பெயா்ப் பலகையை மீண்டும் சரிசெய்து அதே இடத்தில் அமைக்க வேண்டும் எனக் கோரி 10 பெண்கள் உள்பட 60 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com