முதியோா், ஆதரவற்றோா் 50 பேருக்கு தினமும் உணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
ஈரோடு சூளை அருகில் உள்ள மல்லிகை நகா் பகுதியில் உள்ள ஆதரவற்றோா், முதியோா் 50 பேருக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் ஈரோடு நடுநகா் லயன்ஸ் சங்கம், சக்தி மசாலா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
பசிப்பிணி போக்கும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை சக்தி மசாலா நிா்வாக இயக்குநா் பி.சி.துரைசாமி, இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் முதியோா், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி திட்டத்தைத் துவக்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில், திட்ட வழிகாட்டி எ.ஜெ.சரவணன், என்.முத்துசாமி, லயன்ஸ் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.