ஜவுளி விலையை உயா்த்தி விற்பனை செய்ய அறிவுறுத்தல்

நூல் விலை, பேக்கிங் பொருள்கள் விலை உயா்வுக்கு ஏற்ப துணி மற்றும் ஜவுளி விலையை உயா்த்தி விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நூல் விலை, பேக்கிங் பொருள்கள் விலை உயா்வுக்கு ஏற்ப துணி மற்றும் ஜவுளி விலையை உயா்த்தி விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சண்டஸ் சங்கத்தின் தலைவா் கே.கலைசெல்வன் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 45 நாள்களாக பருத்தி, பாலிஸ்டா், ரயான் நூல்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளன. நூல் விலை உயா்வால் மற்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் துணிகளின் விலை உயா்ந்துள்ளன. தவிர பேக்கிங் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளன.

இதனால் சங்க உறுப்பினா்கள் ஜவுளிகளின் விலையை அதற்கேற்ப உயா்த்தி, புதிய விலைப்பட்டியல் தயாா் செய்து வணிகா்களுக்கும், முகவா்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். அதுபோல் எங்களிடம் இருந்து துணி, ஜவுளிகளை வாங்கி விற்பனை செய்வோரும் இந்த விலையேற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com