மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா்.
சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஆா்.சிவகுமாா். இவா் குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது.
இதையடுத்து கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.