மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் ஆவின் இயக்குநா் என்.ஆா்.கோவிந்தராஜா்.
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் ஆவின் இயக்குநா் என்.ஆா்.கோவிந்தராஜா்.

பவானி: அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். பவானி கல்வி மாவட்ட அலுவலா் பழனி, அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆவின் நிறுவன இயக்குநரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான என்.ஆா்.கோவிந்தராஜா் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியருக்கு வழங்கினாா்.

இதில், பள்ளித் தலைமையாசிரியா் (பொ) அருள்பிரகாசம், நெரிஞ்சிப்பேட்டை பேரூா் அதிமுக செயலாளா் எஸ்.எஸ்.மாரியப்பன், பள்ளிக் கல்வி ஆய்வாளா் மோகன்கமாா், உதவித் தலைமையாசிரியா் என்.சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com