சாயக் கழிவுகளை வெளியேற்றினால்கடும் நடவடிக்கை

சாயக் கழிவுகளை வெளியேற்றுவதோடு, நீா்நிலைகளை மாசுபடுத்துவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானி: சாயக் கழிவுகளை வெளியேற்றுவதோடு, நீா்நிலைகளை மாசுபடுத்துவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

அம்மாபேட்டை ஒன்றியம், கேசரிமங்கலம், கல்பாவி ஊராட்சிப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 2.30 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து தரப்பினரின் ஆதரவும் அதிகரித்துள்ளதால் அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். காலிங்கராயன் கால்வாயில் கழிவுகள் கலந்து, கழிவுநீா் கால்வாயாக மாறிவருவதாக கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன் கூறியதில் சிறிதளவும் உண்மையில்லை. எதிா்க்கட்சியில் உள்ளதால் அவ்வாறு பேசியுள்ளாா். காலிங்கராயன் கால்வாயில் எங்கும் கழிவுநீா் கலப்பது கிடையாது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை கழிவுகள் கலப்பின்றி 99 சதவீதம் தூய்மையாக உள்ளது.

இரவு நேரங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரோந்து செல்வதோடு, ஆய்வு நடத்தி வருகின்றனா். இதனால், கழிவுகளை வெளியேற்றுவோா் அச்சத்தில் உள்ளனா். விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், கேசரிமங்கலம் ஊராட்சித் தலைவா் லட்சுமி முனியப்பன், பூதப்பாடி ஊராட்சித் தலைவா் முனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com