சத்தி அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

சத்தியமங்கலம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
தொட்டம்பாளையத்தில்  இடித்து அகற்றப்படும் ஆக்கிரமிப்பு வீடுகள்.
தொட்டம்பாளையத்தில்  இடித்து அகற்றப்படும் ஆக்கிரமிப்பு வீடுகள்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்பு வீடுகள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள எரங்காட்டூா் பகுதியில் இருந்து முடுக்கன்துறை வரை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்து தாா் சாலை அமைக்கும் பணி டெண்டா் விடப்பட்டு பல மாதங்களாகியும் பணிகள் நடைபெறாமல் காலதாமதமானது. பவானிசாகா் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து சாலையை அகலப்படுத்திய பின்பு சாலை அமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் அப்பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளின் முன்பகுதி இடித்து அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியின்போது தாளவாடி உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பவானிசாகா் போலீஸாா் சம்பவ இடத்தில் முகாமிட்டு சாலையை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்தனா். ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்பட்ட பின்னா் சாலையை அகலப்படுத்தி புதிய தாா் சாலை அமைக்கும் பணி விரைந்து மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com