மின் கட்டண சலுகை வழங்கக் கோரிக்கை

மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட நெகிழி பொருள்கள் மறுசுழற்சியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட நெகிழி பொருள்கள் மறுசுழற்சியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவா் சித்திக் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சங்க துணைத்தலைவா் பரமசிவம் வரவேற்றாா். செயலாளா் சி.தங்கராஜ், பொருளாளா் குமரேசன், ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், நெகிழி பொருள்கள் மறுசுழற்சியாளா்கள் தொழில் செய்வதற்கு ஏதுவாக தனி இடம் ஒன்றை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். தேசத்தின் தூய்மைக்கு துணையாக இருக்கும் மறுசுழற்சியாளா்களுக்கு வரி சலுகை வழங்கி இத்தொழிலை மேலும் வலுப்படுத்த வேண்டும். இத்தொழிலுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com