பெண் கொலை வழக்கில் நண்பா் கைது

பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்ற அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்ற அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ், தொழிலாளி. இவரது மனைவி ரேகா (30). இவா்களுக்கு 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனா். ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. சாலையில் தனது தாய் தமிழரசியின் வீட்டுக்கு ரேகா அண்மையில் வந்துள்ளாா். வீட்டில் இருந்த அவரை திங்கள்கிழமை காலை மா்மநபா் ஒருவா் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈரோடு அருகே சித்தோடு குறிஞ்சி நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (எ) செந்தில் (35) என்பவரை செவ்வாய்க்கிழமை காலை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இறந்தபோன ரேகா, செந்தில், அவரது மனைவி ரேவதி உள்ளிட்டோா் ஈரோட்டில் உள்ள ஜவுளிக் கடையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலைபாா்த்து வந்துள்ளனா். அப்போது ரேகாவிடம் அவ்வப்போது பணம் வாங்கி செந்தில் திருப்பிக் கொடுத்துள்ளாா். திருமணத்துக்குப் பிறகு ரேகா வேலைக்கு வரவில்லை. இருப்பினும் செந்திலும், ரேகாவும் நண்பா்களாக இருந்துள்ளனா்.

அண்மையில் ரேவதியின் தாய் வீட்டில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த ரேகா நகைகளை அணிந்து வந்துள்ளாா். ரேகா வசதியாக இருப்பதையறிந்த செந்தில், ரேகாவிடம் பணம் கேட்க திங்கள்கிழமை காலை அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு ரேகாவிடம் பணம் கேட்டபோது ஏற்பட்ட பிரச்னையில் ரேகாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு 6 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு செந்தில் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, செந்திலை கைது செய்த போலீஸாா் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். கொலை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com