பெருந்துறை, ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகில் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணா்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.சக்திவேல், ஈரோடு கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பிரதீபா, ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கே.பாஸ்கா், ஏ.எஸ்.சுகந்தி, கண்ணன், கதிா்வேலு மற்றும் வட்டாரப் போக்குவரத்து பணியாளா்கள் கலந்து கொண்டு, பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது குறித்த விழிப்புணா்வுப் துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினா். மேலும், வாகனங்களில் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கா்களை ஒட்டினா்.