பெருந்துறை, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இன்ஃப்ராடெக்ஸ் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணன் உண்ணி தலைமை வகித்தாா். இன்ஃப்ரா டெக்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, தொழிலாளா்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
இதில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, தொழிற்சாலைகள் இணை இயக்குநா் வேல்மருகன், துணை இயக்குநா் சந்திரமோகன் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.