தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

பவானி அருகே உள்ள மயிலம்பாடி, கல்பாவி, பூனாச்சி, குப்பிச்சிபாளையம் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

பவானி அருகே உள்ள மயிலம்பாடி, கல்பாவி, பூனாச்சி, குப்பிச்சிபாளையம் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், குடிநீா் மேல்தேக்கத் தொட்டி பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் என 60க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நிவாரணமாக தலா 10 கிலோ அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள், முட்டைகள், காய்கறிகள் கொண்ட நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதை பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதில், பவானி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ், ஊராட்சித் தலைவா்கள் ஸ்ரீஜெயந்தி சிவானந்தம், லட்சுமி முனியப்பன், சுதாகா், செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.கே.விஸ்வநாதன், மயிலம்பாடி ஊராட்சிச் செயலாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com