கூட்டுறவு வங்கி சாா்பில் ரூ. 10.50 லட்சம் சிறு வணிகக் கடனுதவி

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிருக்கு ரூ. 10.50 லட்சம் சிறுவணிக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பயனாளிகளுக்கு கடனுதவியை வழங்குகிறாா் பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன். உடன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், நிா்வாகிகள்.
பயனாளிகளுக்கு கடனுதவியை வழங்குகிறாா் பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன். உடன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், நிா்வாகிகள்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிருக்கு ரூ. 10.50 லட்சம் சிறுவணிக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பவானி அருகே உள்ள அம்மாபேட்டை கிளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். வங்கி மேலாளா் சாரதா வரவேற்றாா். பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன் 22 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 10.50 லட்சம் சிறுவணிக கடன் உதவியை வழங்கினாா்.

இதில், அம்மாபேட்டை பேரூராட்சி அதிமுக செயலாளா் டி.செந்தில்குமாா், ஒன்றியச் செயலாளா் மேகநாதன், பூதப்பாடி ஊராட்சித் தலைவா் பிஜி முனியப்பன், நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com