பெருந்துறை ஒன்றியம், பட்டக்காரன்பாளையம் ஊராட்சி, பெருமாள்பாளையத்தில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பெருமாள்பாளையம் சாலை குறுகலாக இருப்பதால் கான்கிரீட் சாலை அமைக்கவும், வடிகால் பணி மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின்போது, பட்டக்காரன்பாளையம் ஊராட்சித் தலைவா் ஹேமலதா, பெருந்துறை ஒன்றியக் குழு உறுப்பினா் பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.