பூந்துறைசேமூா் ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: முன்னாள் அமைச்சா் ஆய்வு

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூந்துறைசேமூா் ஊராட்சியில் முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூந்துறைசேமூா் ஊராட்சியில் முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கருக்கன்வலசு பகுதியில் குடிநீா்த் திட்டப் பணிகளைத் துவக்கிவைத்தாா். கருக்கன்வலசில் இருந்து பெரியபனங்காடு வழியாக சக்தி சக்கரை ஆலை, எரப்பம்பாளையம் செல்லும் வழியில் குரங்கன்ஓடை (எ) அனுமன்நதியின் குறுக்கே உடைந்துபோன தரைப்பாலத்தை ஆய்வு செய்து, புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். தொடா்ந்து பூந்துறைசேமூா் ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்து, அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

இதில், பூந்துறைசேமூா் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்செல்வன், முன்னாள் துணைத் தலைவா் குருசாமி, வாா்டு உறுப்பினா்கள் ஜெயலட்சுமி, சாந்தாதேவி, நவீன், கருக்கன்காடு மகாலிங்கம், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com