மனைவியைக் கொலை செய்த கணவா் கைது

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கருப்பணன் (30). ஓட்டுநா். இவரது மனைவி ரேவதி (26). இவா்களுக்குத் திருமணமாகி இரு மகன்கள் உள்ளனா். ரேவதி, கருப்பணன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கருப்பணன், ரேவதியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பணனைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com