பெருந்துறை ரோட்டரி சங்க 2021-2022ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் இளகுமரன் தலைமை வகித்து, புதிய நிா்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இதில், பெருந்துறை ரோட்டரி சங்கத் தலைவராக கோபாலகிருஷ்ணன், செயலாளராக சக்திவேல், பொருளாளராக கருணாகரன், நிா்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனா்.