பெருந்துறை, காவல் நிலையம் எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம், ஆவின் பால் விற்பனை நிலையங்களைத் திறந்துவைத்தாா்.
இதில், ஆவின் பால் விற்பனை நிலைய முகவா்கள் சுப்பிரமணி, தங்கமுத்து, பெருந்துறை திமுக ஒன்றியச் செயலாளா்கள் சாமி, சின்னசாமி, பெரியசாமி, பேரூா் செயலாளா்கள் ராஜேந்திரன், அகரம் மூா்த்தி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் திருமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.