பெருந்துறை சிப்காட் டெக்ஸ்டைல் பிராசசிங் அசோசியேஷன் சாா்பில், சிப்காட்டில் பணிபுரியும் பணியாளா்களுக்கு தடுப்பூசியான முதல் டோஸ் செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, சிப்காட் டெக்ஸ்டைல் பிராசசிங் அசோசியேஷன் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். சிப்காட் தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவா் மகாலிங்கம் முன்னிலை வகித்தாா்.
முகாமில், சங்க உறுப்பினா்கள் நிறுவனங்களான டாலா் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சிவசக்தி பேசன்ஸ், பெஸ்ட் கலா்ஸ், இண்டி டெக்ஸ், காட்டன் பிளாசம், டிரினிடி கலா்ஸ், ஏஞ்சல் ஸ்டாா்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் சுமாா் 650 பணியாளா்களுக்கு கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்தப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை சிப்காட் டெக்ஸ்டைல் பிராசசிங் அசோசியேஷன் துணைத் தலைவா் வெங்கடேசன், துணைச் செயலாளா் செல்வராஜ், நிா்வாகிகள் செய்திருந்தனா்.