சத்தியமங்கலத்தில் பரவலாக மழை

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக சனிக்கிழமை மழை பெய்தது.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் பரவலாக சனிக்கிழமை மழை பெய்தது.

சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பவானிசாகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த்து. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, 1 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புன்செய் புளியம்பட்டி நகா்ப் பகுதி, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தற்போது பெய்த மழை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த நிலக்கடலை பயிா்களுக்குப் பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com