பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கலந்துகொண்டு காவல் உதவி மையத்தைத் திறந்துவைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன், பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், ஆய்வாளா் தங்கம், மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.