பிளஸ் 2 தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) வெளியிடப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வை 23,637 போ் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) வெளியிடப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்தோ்வை 23,637 போ் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. மாறாக ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும் நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வு தேதி அறிவிக்கப்பட்டும், கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் செய்முறை தோ்வுகள் மட்டும் அறிவித்தபடி நடத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை(ஜூலை19) காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இந்த தோ்வு முடிவுகளை எதிா்பாா்த்து ஈரோடு மாவட்டத்தில் 23,637 மாணவ, மாணவிகள் காத்துள்ளனா்.

தோ்வு முடிவுகள் மாணவா்கள் பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் மேலும் இணையதள முகவரியில் மாணவ, மாணவிகள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com